sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கார் - பைக் மோதி விபத்து பலி மூன்றாக உயர்வு

/

கார் - பைக் மோதி விபத்து பலி மூன்றாக உயர்வு

கார் - பைக் மோதி விபத்து பலி மூன்றாக உயர்வு

கார் - பைக் மோதி விபத்து பலி மூன்றாக உயர்வு


ADDED : செப் 01, 2025 07:21 AM

Google News

ADDED : செப் 01, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலியில், டூ - வீலர் மீது, கார் மோதிய விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆனது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் சுரேஷ், 50. டூ - வீலர் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வருணா, 46. மகள்கள் பிரவீனா, ராசியா, 18. இவர்கள் குடும்பத்துடன், ஆக., 24ல் காரில் துாத்துக்குடி சென்றனர். காரை சுரேஷ் ஓட்டினார்.

கே.டி.சி.நகர் அருகே சென்றபோது, காரின் பின் டயர் திடீரென வெடித்து பல்டியடித்தது. இதில், எதிரே டூ - வீலரில் வந்த திருநெல்வேலி அரசு மருத்துவமனை பல் சிகிச்சை பிரிவு ஊழியர் மலர், 51, மீது மோதியது.

இதில், அவர் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காரில் இருந்த சுரேஷ் குடும்பத்தினர் நால்வரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில், வருணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நேற்று, ராசியா மூளை சாவடைந்தார். அவரது, கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, டீன் டாக்டர் ரேவதி பாலன், அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். மற்ற இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us