/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பத்திரப்பதிவு எழுத்தர் வெட்டிக்கொலை: இருவர் சரண்
/
பத்திரப்பதிவு எழுத்தர் வெட்டிக்கொலை: இருவர் சரண்
பத்திரப்பதிவு எழுத்தர் வெட்டிக்கொலை: இருவர் சரண்
பத்திரப்பதிவு எழுத்தர் வெட்டிக்கொலை: இருவர் சரண்
ADDED : பிப் 24, 2026 04:48 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பத்திரப்பதிவு எழுத்தரை வெட்டிக் கொலை செய்த இருவர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர்.
மூலைக்கரைப்பட்டி அருகே ஆணையப்பபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் 37. பத்திரப்பதிவு எழுத்தராக பணிபுரிந்தார். மனைவி குழந்தைகள் உள்ளனர். இவர் பத்திரப்பதிவுக்காக அலுவலகம் வந்த பெண்ணுடன் பழகி அவருடன் இட்டேரி அருகே வாடகை வீட்டில் வசித்தார்.
இதனால் சுந்தரை பிரிந்து அவரது மனைவி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை 10:30 மணி அளவில் சுந்தர் வீட்டிலிருந்து டூவீலரில் வெளியே வந்தார். அப்போது டூவீலரில் பின்தொடர்ந்த இருவர் சுந்தரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்தனர்.
போலீசார் கூறியதாவது: கொலை செய்த மூலைக்கரைப்பட்டி மணிகண்டன் 37, அவரது தம்பி சுடலை 34, மூலைக்கரைப்பட்டி ஸ்டேஷனில் சரணடைந்தனர். பெண் தகராறில் ஏற்பட்ட விரோதத்தால் கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது. இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

