/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆசிரியர்களின் பணம் கையாடல் கல்வித்துறை ஊழியர் கைது
/
ஆசிரியர்களின் பணம் கையாடல் கல்வித்துறை ஊழியர் கைது
ஆசிரியர்களின் பணம் கையாடல் கல்வித்துறை ஊழியர் கைது
ஆசிரியர்களின் பணம் கையாடல் கல்வித்துறை ஊழியர் கைது
ADDED : ஜன 12, 2026 06:36 AM
திருநெல்வேலி: வாசுதேவநல்லுார் வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த சவுந்தரபாண்டியன், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற பணப்பலன்களில் கையாடல் செய்த வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதுாரை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவர், மேலநீலிதநல்லுார் வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார்.
அப்போது, ஆசிரியர்களின் கையொப்பங்களை போலியாக போட்டு, 40 லட்சம் ரூபாயை தன் வங்கி கணக்கில் வரவு வைத்ததாக, தென்காசி மாவட்ட ஆசிரியர் கூட்டணி செயலர் செய்யது இப்ராஹிம் மூசா, புகார் அளித்திருந்தார்.
பின் அவர், வாசுதேவநல்லுார் தொடக்க கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கும் இதே போல நிதி முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சவுந்தர பாண்டியனை கைது செய்தனர்.

