sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஆசிட் பட்டு மாணவி கண் பாதிப்பு

/

ஆசிட் பட்டு மாணவி கண் பாதிப்பு

ஆசிட் பட்டு மாணவி கண் பாதிப்பு

ஆசிட் பட்டு மாணவி கண் பாதிப்பு


ADDED : பிப் 12, 2024 11:35 PM

Google News

ADDED : பிப் 12, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே தாழையூத்தில் பள்ளியில் ஆசிட் சிந்தியதில் மாணவியின் கண் பாதிப்படைந்தது. அதனை கண்டு கொள்ளாத பள்ளி நிர்வாகம் குறித்து பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து சத்திரம் குடியிருப்பு பகுதியில் இருபாலர் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. அங்குள்ள சோதனைக் கூடத்தில் பாட்டிலில் இருந்து ஆசிட் சிதறியதில 9ம் வகுப்பு மாணவி வர்ஷா 14,வின் வலது கண் பாதிக்கப்பட்டது. அவர் திருநெல்வேலி தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாணவியின் பெற்றோரிடம் ரூ. 10 ஆயிரம் கொடுத்து சமாளித்துக் கொள்ள கூறினர். பெற்றோர் அதனை திரும்ப கொடுத்து விட்டனர். நேற்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் மாணவியின் தாய் சண்முகசுந்தரி, அகில இந்திய மாதர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கல்வித்துறைக்கோ மாவட்ட நிர்வாகத்துக்கோ தகவல் தெரிவிக்காத பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாணவிக்கு சிகிச்சை அளிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us