/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
துபாயில் தந்தை, மகன் பலி தாய் தற்கொலை முயற்சி
/
துபாயில் தந்தை, மகன் பலி தாய் தற்கொலை முயற்சி
ADDED : பிப் 17, 2025 01:06 AM

திருநெல்வேலி: துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி திருநெல்வேலியைச் சேர்ந்த தந்தை, மகன் பலியானதாக தகவலறிந்த மனைவி, கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
திருநெல்வேலி, புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன், 55; ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மகன் கிருஷ்ண சங்கர், 22; சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படித்துள்ளார். இவர் ஒரு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக நண்பர்களுடன் துபாய் சென்றிருந்தார்.
பயிற்சி முடிந்து மற்ற நண்பர்கள் கிளம்பினர். தந்தை துபாயில் இருந்ததால், கிருஷ்ணசங்கர் அவருடன் தங்கினார்.
சில தினங்களுக்கு முன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல் குளத்தில் குளிக்க சென்ற போது, ஆழத்தில் சிக்கிய கிருஷ்ண சங்கர், அவரை காப்பாற்ற முயற்சித்த மாதவன் நீரில் மூழ்கி பலியாகினர்.
இது குறித்து தகவலறிந்த மாதவன் மனைவி விமலா, திருநெல்வேலியில் மனமுடைந்தார். இரு கைகளிலும் கத்தியால் கிழித்து தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலை மாதவன், கிருஷ்ண சங்கரின் உடல்கள் திருநெல்வேலி கொண்டு வரப்பட்டு, எரியூட்டப்பட்டன.