/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெண் வக்கீல் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை
/
பெண் வக்கீல் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை
ADDED : ஜன 05, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தனியார் குவாரி ஊழியர். இவரது மனைவி செல்லா 30. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. செல்லா அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் செல்லா தூக்கிட்டு கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் இறந்தார். பாப்பாகுடி போலீசார் விசாரித்தனர். செல்லா இறப்பு குறித்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் அர்திப் ஜெயின் விசாரணை மேற்கொள்கிறார்.