sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

துணை இயக்குனரை சிக்க வைத்த வழக்கு; தீயணைப்பு அலுவலருக்கு சம்மன்

/

துணை இயக்குனரை சிக்க வைத்த வழக்கு; தீயணைப்பு அலுவலருக்கு சம்மன்

துணை இயக்குனரை சிக்க வைத்த வழக்கு; தீயணைப்பு அலுவலருக்கு சம்மன்

துணை இயக்குனரை சிக்க வைத்த வழக்கு; தீயணைப்பு அலுவலருக்கு சம்மன்

1


UPDATED : டிச 12, 2025 10:36 AM

ADDED : டிச 12, 2025 04:32 AM

Google News

UPDATED : டிச 12, 2025 10:36 AM ADDED : டிச 12, 2025 04:32 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்புத்துறை துணை இயக்குனரை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைத்த வழக்கில், தொடர்புடைய கோவை தீயணைப்பு அதிகாரிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சரவணபாபுவை 50, லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைப்பதற்காக தீயணைப்பு துறையினரே, விஜய் என்ற நபர் மூலம் நவ. 17 இரவில் அவரது அலுவலகத்தில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை வைக்க செய்தனர்.

நவ.18ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் அந்த பணத்தை கண்டெடுத்து சரவணபாபு மீது வழக்கு பதிவு செய்தனர். தீயணைப்பு அலுவலகத்திற்கு எதிர்புறம் உள்ள வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த பணம் வைக்கும் திட்டம் அம்பலமானது.

பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கும் இந்த வழக்கில் தீயணைப்பு வீரர்கள் துாத்துக்குடி ஆனந்த், திருநெல்வேலி டவுன் மூர்த்தி, சென்னை அம்பத்துார் முருகேஷ், மற்றும் பணம் வைத்த விஜய், துாத்துக்குடி முத்துசுடலை ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மாதம் ஒத்திகை பார்த்து நடத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்த கொங்கு மண்டல தீயணைப்பு அதிகாரிகள், சம்பவத்தின் போதும் கைதான நபர்களிடம் அதிக முறை பேசிய தீயணைப்பு துறை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடந்து வருகிறது.

கோவை வட்டாரத்தில் தீயணைப்பு அதிகாரியாக பணிபுரியும் ஒருவர் ஏற்கனவே திருநெல்வேலியில் பணியாற்றி உள்ளார். தற்போது கைதான நபர்களுடன், சம்பவத்தன்று அவர் அடிக்கடி அலைபேசியில் பேசியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

எனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு போலீசார் மெயிலில் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர் நேற்று ஆஜராகவில்லை. இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பணம் அனுப்பியவர்கள், அறை சாவி தயாரித்து கொடுத்தவர்கள் என விசாரணை தொடர்கிறது.






      Dinamalar
      Follow us