/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நயினார் நாகேந்திரன் வீடு வழியே சென்றது உணவு டெலிவரி ஊழியர் மிரட்டல் இல்லை என விளக்கம்
/
நயினார் நாகேந்திரன் வீடு வழியே சென்றது உணவு டெலிவரி ஊழியர் மிரட்டல் இல்லை என விளக்கம்
நயினார் நாகேந்திரன் வீடு வழியே சென்றது உணவு டெலிவரி ஊழியர் மிரட்டல் இல்லை என விளக்கம்
நயினார் நாகேந்திரன் வீடு வழியே சென்றது உணவு டெலிவரி ஊழியர் மிரட்டல் இல்லை என விளக்கம்
ADDED : நவ 16, 2025 02:03 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை சிலர் நோட்டமிட்டதாக வந்த தகவலை போலீசார் மறுத்தனர். அந்த வழியே சென்றது உணவு டெலிவரி ஊழியர்கள் என விளக்கம் அளித்துள்ளனர்.
திருநெல்வேலி பெருமாள்புரத்தில் நயினார் நாகேந்திரன் வீடு உள்ளது. நவ., 12ம் தேதி இரவில் அவரது வீட்டை டூவீலரில் சென்ற இருவர் நோட்டமிட்டமிட்டதாகவும், இரவு 7:50 மணிக்கு அவரது வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக அலைபேசியில் மிரட்டல் வந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்த போலீஸ் அதிகாரிகள் அவ்வாறு எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்தனர். நவ.,12ம் தேதி இரவில் அங்கு டூவீலரில் சுற்றித்திரிந்த நபர்கள் குறித்து விசாரித்தனர்.
இரவில் டூவீலரில் உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் அங்கு சுற்றியுள்ளனர். செயின்ட் ஜோசப் தெருவில் ஒருவர் வீட்டுக்கு செல்வதற்கு முகவரி தெரியாததால் நீச்சல் குளம் தெரு வழியாக வந்துள்ளனர். பின்னர் நயினார் நாகேந்திரன் வீடு இருக்கும் தெரு வழியாக சென்று டெலிவரி கொடுத்துவிட்டு வண்ணார்பேட்டை சென்று விட்டனர். ஆனால் இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தான் மிரட்டல் நபர்கள் என தெரிவிக்கப்பட்டது என போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

