/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வீட்டில் துப்பாக்கிகள் வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரர் கைது
/
வீட்டில் துப்பாக்கிகள் வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரர் கைது
வீட்டில் துப்பாக்கிகள் வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரர் கைது
வீட்டில் துப்பாக்கிகள் வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரர் கைது
ADDED : மார் 22, 2026 04:26 PM
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே வீட்டில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
திருக்குறுங்குடி அருகே சிங்களாக்குறிச்சியைச் சேர்ந்த மகாலிங்கம் 31. இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது மகாலிங்கம் நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியது தெரிந்தது.
அவரிடம் இருந்து கரிமருந்து பயன்படுத்தி சுடும் நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது 2 'ஏர்கன்' துப்பாக்கிகள், தோட்டாக்கள், கரிமருந்து கைப்பற்றப்பட்டது.விசாரணையில் மகாலிங்கம் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது தெரிந்தது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அவரது தந்தை, தாத்தா ராணுவத்தில் பணியாற்றிய காலத்திலிருந்து வீட்டில் இருப்பதாக மகாலிங்கம் தெரிவித்தார்.சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததன் பேரில் திருக்குறுங்குடி போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர்.

