sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 கவின் ஆணவக்கொலை பெண் எஸ்.ஐ.,யை ஆஜர்படுத்த உத்தரவு

/

 கவின் ஆணவக்கொலை பெண் எஸ்.ஐ.,யை ஆஜர்படுத்த உத்தரவு

 கவின் ஆணவக்கொலை பெண் எஸ்.ஐ.,யை ஆஜர்படுத்த உத்தரவு

 கவின் ஆணவக்கொலை பெண் எஸ்.ஐ.,யை ஆஜர்படுத்த உத்தரவு


ADDED : நவ 15, 2025 01:29 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி கே.டி.சி. நகரில் ஜூலை 27ல் நடந்த காதல் பிரச்னையில் ஐ.டி., ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் கவின் காதலியின் சகோதரர் சுர்ஜித், தந்தை எஸ்.ஐ., சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். காதலியின் தாயார் எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரி கைதுசெய்யப்படவில்லை. இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.,யினர் விசாரித்து வருகின்றனர். குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம் பெற்றுள்ள நிலையிலும் எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரி கைது செய்யப்படவில்லை.

இவ்வழக்கில் அவர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருநெல்வேலி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். மேலும் நவ., 28 ல் கிருஷ்ணகுமாரி யை கண்டிப்பாக ஆஜர்படுத்தவும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் சிறையில் உள்ள ஜெயபால் தாக்கல் செய்த ஜாமின் மனு தொடர்பாக கவின் குடும்பத்தினர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நவ.19க்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us