/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வெள்ளத்தில் சிறுமி பலி 3வது நாளாக போராட்டம்
/
வெள்ளத்தில் சிறுமி பலி 3வது நாளாக போராட்டம்
ADDED : ஜன 18, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மானூர் அருகே பள்ளமடை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகள் அனிதா 13. 8ம் வகுப்பு மாணவி. ஜன.14 மதியம் ஓடை வழியே தோட்டத்திற்கு சென்றார். ஓடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிறுமி அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்.
உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு, மடையை திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 3வது நாளாக நேற்று அவரது உடலை பெற்றுக் கொள்ளாமல் கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறை, போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.