/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
இரண்டாம் முறையாக கவிழ்ந்த அரசு பஸ்: 30 பேர் காயம்
/
இரண்டாம் முறையாக கவிழ்ந்த அரசு பஸ்: 30 பேர் காயம்
இரண்டாம் முறையாக கவிழ்ந்த அரசு பஸ்: 30 பேர் காயம்
இரண்டாம் முறையாக கவிழ்ந்த அரசு பஸ்: 30 பேர் காயம்
ADDED : நவ 16, 2025 01:55 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 30 பயணிகள் காயமடைந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்றது. டிரைவர் பிராங்கிளின் பெஞ்சமின் ஓட்டினார். கண்டக்டராக குமரேசன் பணியாற்றினார்.
60 பயணிகள் இருந்தனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முருகானந்தபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட ஒதுங்கியதால் பஸ் ரோட்டோரம் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 30 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். கூடங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.இதே பஸ் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் இதே பகுதியில் கவிழ்ந்தது.

