/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரசு பஸ் கவிழ்ந்தது: பயணிகள் தப்பினர்
/
அரசு பஸ் கவிழ்ந்தது: பயணிகள் தப்பினர்
ADDED : ஜூலை 23, 2025 02:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் உதயத்தூருக்கு காவல்கிணறு, வடக்கன்குளம், ராதாபுரம் வழியாக அரசு பஸ் சென்று வருகிறது.
நேற்று மாலை 5:00 மணியளவில் ராதாபுரம் அருகே வாணியங்குளம் என்ற இடத்தில் இந்த பஸ் சென்ற போது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விட டிரைவர் ஓரமாக ஓட்டினார்.
ரோட்டோரம் குடிநீர் குழாய்க்காக தோண்டி மூடப்பட்ட பகுதியில் சென்ற போது டயர்கள் அதில் சிக்கி பஸ் ஒருபுறமாக கவிழ்ந்தது. இதில் பயணிகள் லேசான காயமுற்றனர். வாணியங்குளம் கிராம மக்கள் ஏணிகளை வைத்து பயணிகளை மீட்டனர்.
பின் பஸ்சும் மீட்கப்பட்டது.

