sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மாவட்ட வருவாய் அலுவலர் என பண மோசடி ஏட்டு, ஓசூர் பெண் கைது

/

மாவட்ட வருவாய் அலுவலர் என பண மோசடி ஏட்டு, ஓசூர் பெண் கைது

மாவட்ட வருவாய் அலுவலர் என பண மோசடி ஏட்டு, ஓசூர் பெண் கைது

மாவட்ட வருவாய் அலுவலர் என பண மோசடி ஏட்டு, ஓசூர் பெண் கைது

1


ADDED : அக் 06, 2024 07:37 AM

Google News

ADDED : அக் 06, 2024 07:37 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: மாவட்ட வருவாய் அலுவலர் என கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த ஓசூரை சேர்ந்த பெண்ணும், திருநெல்வேலி மாநகர போலீஸ் ஏட்டும் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் முருகராஜ், 41. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரை சேர்ந்தவர். இவருக்கும் ஓசூரை சேர்ந்த வளர்மதி, 42, என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

வளர்மதி, திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) ஆக பணிபுரிகிறார் என கூறி பலரிடமும் மோசடி செய்தார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு நிலப்பட்டா வாங்கி தருவதாக கூறி ரூ 10 லட்சம் பெற்றுள்ளார். பட்டா வாங்கித் தரவில்லை பணமும் திரும்ப தராததால் சசிகுமார் முருகராஜிடம் கேட்டார். முருகராஜ் காசோலை கொடுத்தார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது.

எனவே முருகராஜிடம் சசிக்குமார் பணம் கேட்டார். பணம் தராததால் திருநெல்வேலியில் ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன்பேரில் முருகராஜ், வளர்மதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us