sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 மூதாட்டியை கட்டிப்போட்டு 25 பவுன், பணம் கொள்ளை

/

 மூதாட்டியை கட்டிப்போட்டு 25 பவுன், பணம் கொள்ளை

 மூதாட்டியை கட்டிப்போட்டு 25 பவுன், பணம் கொள்ளை

 மூதாட்டியை கட்டிப்போட்டு 25 பவுன், பணம் கொள்ளை


ADDED : ஜன 09, 2026 06:15 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கயிற்றால் கட்டிப்போட்டு 25 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சுத்தமல்லி அருகே பொன்விழாநகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ஆண்டிச்சி 65. நேற்று மதியம் மாரியப்பன் வெளியே சென்றார். ஆண்டிச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் ஆண்டிச்சியை கயிற்றால் கட்டி போட்டனர். பின் அவர் அணிந்திருந்த நகைகள், கம்மல், மூக்குத்தி மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 25 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதில் ஈடுபட்ட மூவரை சுத்தமல்லி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us