/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போக்சோ கைதி சிறையில் தற்கொலை
/
போக்சோ கைதி சிறையில் தற்கொலை
ADDED : நவ 20, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: தென்காசி அருகே ஆய்க்குடியை சேர்ந்தவர் திருமலைகுமார் 40. இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்சோ வழக்கில் கைதாகி திருநெல்வேலி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்தார்.
நவ. 12ல் இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் அவர் ஒரு ஆண்டுக்கு சிறையில் இருந்து வெளிவர முடியாது. விரக்தியில் இருந்த அவர் கழிவறையில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் விசாரணை மேற்கொண்டார்.

