/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மருத்துவமனையில் கழிவு எரிப்பு போலீசார் வழக்கு
/
மருத்துவமனையில் கழிவு எரிப்பு போலீசார் வழக்கு
ADDED : ஏப் 13, 2025 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: மருத்துவ கழிவை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே எரித்ததாக, மருத்துவமனை நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருநெல்வேலி டவுன் கண்டியப்பேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேரும் மருத்துவக் கழிவை, மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே எரித்துள்ளனர்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி மாரி சங்கர் என்பவர் புகார் அளித்தார். அதன் படி, திருநெல்வேலி டவுன் போலீசார், மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.