ADDED : மார் 29, 2025 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் முத்தையா 45.
கூடங்குளம் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். ஏர்வாடியில் மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.நேற்று காலை கூடங்குளம் ஸ்டேஷனுக்கு டூவீலரில் பணிக்கு சென்றார். அப்போது எதிரே வந்த டூ வீலர் மீது மோதியதில் பலத்த காயமுற்றார்.
நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கூடங்குளம்போலீசார் விசாரித்தனர்.