sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கோதையாறு வனத்தில் விடப்பட்டது கூடலுார் யானை ராதாகிருஷ்ணன்

/

கோதையாறு வனத்தில் விடப்பட்டது கூடலுார் யானை ராதாகிருஷ்ணன்

கோதையாறு வனத்தில் விடப்பட்டது கூடலுார் யானை ராதாகிருஷ்ணன்

கோதையாறு வனத்தில் விடப்பட்டது கூடலுார் யானை ராதாகிருஷ்ணன்


ADDED : அக் 27, 2025 12:57 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிடிபட்ட யானை ராதாகிருஷ்ணனை நேற்று அதிகாலை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். பின் கோதையாறு வனப்பகுதியில் விட்டனர்.

கூடலூர் ஓவேலி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 12 பேரை தாக்கிய ராதாகிருஷ்ணன் என்ற ஆண் காட்டு யானையை வனத்துறையினர் செப்., 23ல் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். முதுமலை புலிகள் காப்பகம், அபயாரணயம் யானைகள் முகாமில் அமைக்கப்பட்ட கராலில் அடைத்து யானையை கண்காணித்து வந்தனர். உயரதிகாரிகள் உத்தரவின்படி கராலில் இருந்த காட்டு யானை ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் நள்ளிரவு கும்கி யானைகள் உதவியுடன் வெளியே அழைத்து வரப்பட்டது. பின்னர் லாரியில் ஏற்றப்பட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோதையாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.






      Dinamalar
      Follow us