/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரசு பஸ்சில் ஏசி 'மக்கர்' பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு
/
அரசு பஸ்சில் ஏசி 'மக்கர்' பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு
அரசு பஸ்சில் ஏசி 'மக்கர்' பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு
அரசு பஸ்சில் ஏசி 'மக்கர்' பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு
ADDED : ஜூலை 18, 2025 08:44 PM
திருநெல்வேலி:மதுரையில் இருந்து திருநெல்வேலி வந்த அரசு பஸ்சில் ஏசி வேலை செய்யாததால், அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர், பொது மேலாளர் சொந்த பணத்திலிருந்து, 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
திருநெல்வேலியை சேர்ந்தவர் ராஜேஷ், 35. இவர், 2024 ஏப்., 1ல் மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு அரசு போக்குவரத்து கழக ஏசி பஸ்சில், 190 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணித்தார். சாதாரண பஸ் கட்டணத்தை விட, 37 ரூபாய் கூடுதலாக ஏசி பஸ்சில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், பஸ்சில் ஏசி வேலை செய்யவில்லை.
இதனால் பயணத்தின் போது அவதிக்குள்ளான ராஜேஷ், பொதுமேலாளரிடம் புகார் அளித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வழக்கறிஞர் பிரம்மா என்பவர் வாயிலாக ராஜேஷ் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி கிளடஸ் டோன் பிளசட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் ஏசி வசதியில்லாததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 25,000 ரூபாய் வழக்கு செலவுக்காக, 10,000 ரூபாய் என, 35,000 ரூபாய் இழப்பீட்டை ஒரு மாதத்திற்குள் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர், நிர்வாக இயக்குநர் தங்கள் சொந்த பணத்தில் வழங்க உத்தரவிட்டனர்.