sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மாணவிக்கு பாலியல் தொந்தரவு; பேராசிரியர் மீது வழக்கு

/

மாணவிக்கு பாலியல் தொந்தரவு; பேராசிரியர் மீது வழக்கு

மாணவிக்கு பாலியல் தொந்தரவு; பேராசிரியர் மீது வழக்கு

மாணவிக்கு பாலியல் தொந்தரவு; பேராசிரியர் மீது வழக்கு


ADDED : அக் 14, 2025 06:44 AM

Google News

ADDED : அக் 14, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி இன்ஜினியரிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேரன்மகாதேவி ஸ்காட் இன்ஜினியரிங் கல்லூரி மின்னணுவியல் துறை துணைப் பேராசிரியர் ஜான் சாமுவேல் ராஜ் 37. தன் வகுப்பு மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுலாவுக்காக கேரள மாநிலம் மூணாறு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

ஆனால் மாணவிகள் யாரும் புகார் அளிக்கவில்லை. சுற்றுலா முடிந்து கல்லூரிக்கு வந்தபின் சில மாணவர்கள் பேராசிரியர் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து, 4 மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சக மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் ஜான் சாமுவேல் ராஜை சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், கல்லூரிக்குள் நடந்த தகராறு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சேரன்மகாதேவி போலீசார், ஏன் பேராசிரியர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு குறித்து தாமாக வழக்கு பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் நேற்று சேரன்மகாதேவி போலீசார் ஜான் சாமுவேல் ராஜ் மீது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு பதிவு செய்தனர். புகார் அளித்த மாணவியின் விவரங்களும், வழக்கு பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளும் குறித்து மாவட்ட எஸ்.பி.,அலுவலகம் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.






      Dinamalar
      Follow us