sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தாழையூத்து அருகே காட்டுத் தீ போராடி அணைத்த வீரர்கள்

/

தாழையூத்து அருகே காட்டுத் தீ போராடி அணைத்த வீரர்கள்

தாழையூத்து அருகே காட்டுத் தீ போராடி அணைத்த வீரர்கள்

தாழையூத்து அருகே காட்டுத் தீ போராடி அணைத்த வீரர்கள்


ADDED : ஜூலை 07, 2025 03:34 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காப்புக்காடு அருகே இரவில் மேய்ச்சல் நிலத்தில் திடீரென காட்டுத்தீ பரவியது. மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காப்புக்காடு பள்ளிக்கோட்டை அருகே கால்நடை மேய்ச்சல் நிலத்தில் நேற்று முன்தினம் இரவில் காட்டுத்தீ பரவியது. உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய அலுவலர் பர்னபாஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் பள்ளிக்கோட்டை கிராமத்து மக்களும் இணைந்து தீயை அணைத்தனர். காட்டுப்பகுதிக்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.






      Dinamalar
      Follow us