/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
/
லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : நவ 27, 2025 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக 2019 மார்ச்ல் பணியாற்றியவர் விஜி. சீவலப்பேரியில் மணல் குவாரி நடத்தி வந்த ரவி என்பவரிடம் விஜி மாதாந்திர லஞ்சம் கேட்டதாக கூறப் படுகிறது.
ரவி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது விஜி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வழக்கு திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுப்பையா தீர்ப்பளித்தார்.

