sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கூவமாகும் தாமிரபரணி; கவுன்சிலர் போராட்டம்

/

கூவமாகும் தாமிரபரணி; கவுன்சிலர் போராட்டம்

கூவமாகும் தாமிரபரணி; கவுன்சிலர் போராட்டம்

கூவமாகும் தாமிரபரணி; கவுன்சிலர் போராட்டம்

2


ADDED : அக் 01, 2024 05:58 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:58 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி, : திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். தி.மு.க., கவுன்சிலராக வெற்றி பெற்ற பவுல்ராஜ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

விளக்க கடிதம் அனுப்பியும் அவர் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படாததால், தாம் முற்றிலும் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.

தற்போது சுயேச்சை கவுன்சிலரான பவுல்ராஜ், நேற்று தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் குடத்துடன் நடைபயணமாக மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றார்.

'தாமிரபரணியில் பல இடங்களில் கழிவு நீர் சேர்வது குறித்து நீதிமன்றமே குற்றம்சாட்டிய பிறகும் இன்னும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது' என பதாகையை கையில் ஏந்தியிருந்தார்.

மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, ''தற்போது, மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப்பணிகள் நடக்கின்றன.

''அவை முழுமையாக முடிந்து, பயன்பாட்டுக்கு வரும்போது சாக்கடை நீர் ஆற்றில் கலக்க வாய்ப்பில்லை. தற்போதும் நேரடியாக கலக்காமல் தடுப்புச் சுவர் ஏற்படுத்தி உள்ளோம்,'' என்று விளக்கம் அளித்தார்.






      Dinamalar
      Follow us