/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
இரவு மது விற்பனை; டாஸ்மாக் ஊழியர் கைது
/
இரவு மது விற்பனை; டாஸ்மாக் ஊழியர் கைது
ADDED : மே 20, 2025 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அரசு டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியைக் கடந்தும் மதுபான விற்பனை நடந்தது.
மது வாங்கிய சிலர் எடுத்த வீடியோ வைரலானது. இதுகுறித்து எஸ்.பி., சிலம்பரசனுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில் வள்ளியூர் போலீசார், அந்த டாஸ்மாக் கடையில் பணியாற்றிய மனோஜ் 37, என்பவரை கைது செய்தனர். இரவு 10:00 மணிக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டால் கடும் நடவடிக்கை என எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.