sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த காவலர்

/

டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த காவலர்

டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த காவலர்

டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த காவலர்

11


UPDATED : மே 22, 2024 01:50 PM

ADDED : மே 22, 2024 10:57 AM

Google News

UPDATED : மே 22, 2024 01:50 PM ADDED : மே 22, 2024 10:57 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் இருந்து, காவலர் ஒருவர் பஸ்ஸில் ஏறி உள்ளார். இதனை அடுத்து நடத்துனர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது, ''அந்த காவலர் அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் கிடையாது,'' என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து நடத்துனர், ''அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும்,'' எனக் கூறினார். இதனைத்தொடர்ந்து காவலர், ''எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்து துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம்; நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான், எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும்'' என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது தூரத்தில் காவலரை நடத்துனர் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

போக்குவரத்துத்துறை விளக்கம்

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அளித்த விளக்கம்: வாரண்ட் இருந்தால் மட்டுமே போலீசார் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். இவ்வாறு விளக்கமளித்ததுடன், நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்தது.








      Dinamalar
      Follow us