/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நகையை விழுங்கிய திருடன்: 'எனிமா' கொடுத்து மீட்பு
/
நகையை விழுங்கிய திருடன்: 'எனிமா' கொடுத்து மீட்பு
ADDED : ஆக 26, 2025 12:26 AM
திருநெல்வேலி:
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியிடம், 5 சவரன் நகையை திருடிய மருத்துவமனை ஊழியருக்கு, 'எனிமா' கொடுத்து நகை மீட்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மாள், 79. உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கொக்கிரகுளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை, மருத்துவமனை ஊழியரான குறிச்சி பகுதியைச் சேர்ந்த ராமர், 25, என்பவர் பறித்துள்ளார்.
சுப்பம்மாள் சத்தம் போட்டதால், ராமர் கழிப்பறைக்குள் புகுந்தார். மருத்துவமனை ஊழியர்கள் அவரை பிடித்தனர். அவரிடம் நகை இல்லை. இருப்பினும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்ததில், நகையை விழுங்கி விட்டதாக தெரிவித்தார்.
போலீசார் ராமருக்கு எனிமா கொடுத்து, அவர் விழுங்கிய நகையை வெளியே எடுத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.