sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தென்காசியில் சாலை மறியல் 16 பெண்கள் கைது

/

தென்காசியில் சாலை மறியல் 16 பெண்கள் கைது

தென்காசியில் சாலை மறியல் 16 பெண்கள் கைது

தென்காசியில் சாலை மறியல் 16 பெண்கள் கைது


ADDED : செப் 17, 2011 02:31 AM

Google News

ADDED : செப் 17, 2011 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி : தென்காசியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தை சேர்ந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சமையல் எண்ணெய், பருப்பு, மசாலா சாமான் வகைகள் தேவையான அளவிற்கு வழங்கிட வேண்டும். பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள வறுமைகோடு பட்டியலை புதுப்பித்து அனைத்து ஏழை, எளிய மக்களையும் இணைத்து புதிய பட்டியலை வெளியிட வேண்டும்.முதியோர், விதவை, ஊனமுற்றோர் அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிட வேண்டும். உதவித் தொகை பெறுவதற்கு தேவையற்ற நிபந்தனைகளை தளர்த்தி விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி, செங்கோட்டை வட்டார அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தென்காசி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.நகர செயலாளர்கள் தென்காசி அனிசாபேகம், செங்கோட்டை ஆயிஷாள் பீவி தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவி நிர்மலாராணி மறியல் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் கலா, சித்ரா, உமா, லட்சுமி, மீராள் பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us