sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தெற்குமேட்டில் 50 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கல்

/

தெற்குமேட்டில் 50 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கல்

தெற்குமேட்டில் 50 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கல்

தெற்குமேட்டில் 50 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கல்


ADDED : செப் 17, 2011 02:50 AM

Google News

ADDED : செப் 17, 2011 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி : தெற்குமேட்டில் 50 பயனாளிகளுக்கு கறவை மாடு வழங்கப்பட்டது.தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக கறவை மாடு வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

செங்கோட்டை யூனியன் தெற்குமேடு அரசு நடுநிலைப் பள்ளியில் இலவச கறவை மாடு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்து 50 பயனாளிகளுக்கு இலவச கறவை மாடுகளை வழங்கினார்.கறவை மாடு ஒன்று வாங்குவதற்கு பயண செலவு, இன்சூரன்ஸ் உட்பட 34 ஆயிரத்து 950 ரூபாய் அரசு வழங்கியுள்ளது. மேலும் இலவசமாக இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கறவை மாடுகளின் காதுகளில் குறியீட்டு எண்ணுடன் கூடிய டோக்கன் பச்சை நிறத்தில் மாட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த கறவை மாடுகளை வேறு யாருக்கும் விற்பனை செய்ய இயலாது.நிகழ்ச்சியில் தென்காசி ஆர்.டி.ஓ.காங்கேயன் கென்னடி, பி.ஆர்.ஓ. இளங்கோவன், ஏ.பி.ஆர்.ஓ.நவாஸ்கான், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் நடராஜன், உதவி இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், ஆவின் நிறுவன அதிகாரி டாக்டர் அண்ணாதுரை, பால்வள மேலாளர் வெள்ளச்சாமி, செங்கோட்டை யூனியன் கமிஷனர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால், புளியரை இளநிலை கால்நடை உதவி டாக்டர் ஜெயபால், தெற்குமேடு பஞ்.,தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us