sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சேரன்மகாதேவியில் வியாபாரியை அடித்துக் கொலை செய்தவர் கைது

/

சேரன்மகாதேவியில் வியாபாரியை அடித்துக் கொலை செய்தவர் கைது

சேரன்மகாதேவியில் வியாபாரியை அடித்துக் கொலை செய்தவர் கைது

சேரன்மகாதேவியில் வியாபாரியை அடித்துக் கொலை செய்தவர் கைது


ADDED : செப் 17, 2011 02:50 AM

Google News

ADDED : செப் 17, 2011 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேரன்மகாதேவி : சேரன்மகாதேவியில் சிகரெட் கடன் கொடுக்க மறுத்த கடைக்காரரை அடித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சேரன்மகாதேவி லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் பொன்னுசாமி (56).

இவர் சேரன்மகாதேவி தேரடி தெருவில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரிடம் கடையத்தெருவை சேர்ந்த செண்பகம் மகன் துரை (எ) சுப்பையா சிகரெட் கடன் கேட்டுள்ளார். ஏற்கனவே இவர் 300 ரூபாய் கடன் வைத்திருப்பதால் பொன்னுசாமி கொடுக்க மறுத்துள்ளார்.இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு முற்றியது. இந்நிலையில் துரை (எ) சுப்பையா அங்கிருந்த மண்வெட்டி கணையால் பொன்னுசாமியை பல இடங்களில் தாக்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பொன்னுசாமி அங்கிருந்து ஓடவே மயக்கமாகி கீழே விழுந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்சிங் வழக்குப்பதிவு செய்து துரை (எ) சுப்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.








      Dinamalar
      Follow us