ADDED : மார் 19, 2025 03:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி,:திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் பாஸ்கர் 58. திருநெல்வேலி மாவட்டம் தாட்கோ திட்டத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இங்கு அன்பு நகரில் வீட்டில் தனியே வசித்து வந்தார்.
நேற்று அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஊழியர்கள் அவரை அலைபேசியில் அழைத்தும் பதில் அளிக்காததால் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
அவர் வீட்டில் இறந்து கிடந்தார். பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர்.