sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கரகாட்ட கலைஞர் கொலை நண்பர்கள் மூன்று பேர் கைது

/

கரகாட்ட கலைஞர் கொலை நண்பர்கள் மூன்று பேர் கைது

கரகாட்ட கலைஞர் கொலை நண்பர்கள் மூன்று பேர் கைது

கரகாட்ட கலைஞர் கொலை நண்பர்கள் மூன்று பேர் கைது


ADDED : ஜூலை 16, 2025 02:52 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் கரகாட்டக் கலைஞரை கொலை செய்த, அவரது நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி பழையபேட்டையை சேர்ந்தவர் வெற்றிவேல், 20. கரகாட்டத்திற்கு சென்று வந்தார். செப்டிக் டேங்க் கிளீனிங் லாரியிலும் வேலை பார்த்தார். இவரை, நேற்று முன்தினம் காணவில்லை. இந்நிலையில், நேற்று காலை, திருநெல்வேலி மாவட்டம், மானுார் அருகே நரியூத்து பரும்பு பகுதியில் இவரது உடல் கிடந்தது. மூக்கு, காதில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. மானுார் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், வெற்றிவேலுடன், செப்டிங் டேங்க் கிளீனிங் வேலை செய்த நண்பர்களான, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து, 21, முக்கூடலைச் சேர்ந்த இசக்கிமுத்து, 23, பழைய பேட்டையை சேர்ந்த தங்ககுமார், 23, ஆகியோருடன், மது அருந்தியதில் தகராறு ஏற்பட்டது. இதில், வெற்றிவேலுவை தாக்கி கொலை செய்து, உடலை காட்டுப்பகுதியில் வீசியது தெரிந்தது.

மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us