ADDED : ஜன 10, 2025 02:37 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி பொதிகைநகர் அருகே புலி உலவியதாக பெண்கள் புகார் கூறியதால் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனி பொதிகைநகர் அருகே அப்பல்லோ காலனியில் புதர்மண்டிய இடத்தில் நேற்று பகலில் புலி ஒன்று உலவியதை இரு பெண்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர்.
போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். புலியின் காலடி தடம் போன்று இருந்தது. வனத்துறை அதிகாரி கேசவன், டாக்டர் மனோகரன் தலைமையில் ஆய்வு செய்தனர். அங்கு புலி வந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.
இதே பகுதியில் திருமால்நகர் அருகே  2015 ஜனவரி 19ல் சிறுத்தை வந்தது. பின்னர் அதனை வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் கொண்டு விட்டனர். எனவே புலி வந்துள்ளதா என்பதை அதிகாரிகள் இன்னும் ஊர்ஜிதப்படுத்தாத நிலையில் வனத்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

