/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலியும், அரிவாள் கலாசாரமும்
/
திருநெல்வேலியும், அரிவாள் கலாசாரமும்
ADDED : ஏப் 16, 2025 04:36 AM

திருநெல்வேலி ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் வகுப்பறையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வெட்டிய மாணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரிவாள் கலாசாரம்:
நெல்லை மாவட்டத்தில், ஜாதி ரீதியான மோதல்கள், 1980ல் துவங்கின. பின் கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள் அளவிலும் நடந்து வருகிறது. கங்கைகொண்டான், கோபாலசமுத்திரம், நாங்குநேரி, களக்காடு வள்ளியூர் போன்ற பல்வேறு பள்ளிகளிலும், இத்தகைய மோதல்கள் நடந்துள்ளன. இதுவரையிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே நடந்த மோதல், அரிவாள் வெட்டு சம்பவங்கள் முதன் முறையாக மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் நடந்துள்ளது.

