sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மக்களுக்காக அயராது உழைக்க ஜெ.,உத்தரவு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி

/

மக்களுக்காக அயராது உழைக்க ஜெ.,உத்தரவு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி

மக்களுக்காக அயராது உழைக்க ஜெ.,உத்தரவு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி

மக்களுக்காக அயராது உழைக்க ஜெ.,உத்தரவு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி


ADDED : ஜூலை 24, 2011 01:34 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடையநல்லூர் : அதிமுக ஆட்சிக்கு வருமென எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அயராது பாடுபட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.



தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்று நேற்று காலை எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர் செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- ''முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி கடையநல்லூர் தொகுதியில் அனைத்து பணிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கு தேவைப்படக்கூடிய பணிகளை மேற்கொள்ள நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், மக்கள் நலமுடன் வாழ எந்த தொய்வும் பணிகளில் இருக்க கூடாது என அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும், அப்போது தான் அனைவரும் நலமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் வாக்களித்துள்ளனர். நம்பிக்கையுடன் வாக்களித்துள்ள தமிழக மக்களுக்கு அல்லும், பகலும் அயராது பாடுபட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.



அதனை ஏற்று அனைத்து பணிகளும் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பணிகளில் குறைபாடு இருக்கிறது என்பது தெரிந்தால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் விரைவாக முடித்திட ஏற்பாடு செய்யப்படும். வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாகவும், நிச்சயமாகவும் முடிக்கப்படும். கடையநல்லூர் பகுதியில் நலிவடைந்து காணப்படுவதாக கூறப்படும் கைத்தறி தொழில் எழுச்சிபெற சம்பந்தப்பட்ட துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.பேட்டியின் போது மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், சாம்பவர்வடகரை மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., நயினாமுகம்மது, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, நகர செயலாளர் கிட்டுராஜா, செங்கோட்டை குருசாமி உடனிருந்தனர்.










      Dinamalar
      Follow us