sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

இளம் வயதிலேயே அறிவியல் ஆய்வு திட்டம் 485 மாணவர்களுக்கு "இன்ஸ்பயர்' விருது

/

இளம் வயதிலேயே அறிவியல் ஆய்வு திட்டம் 485 மாணவர்களுக்கு "இன்ஸ்பயர்' விருது

இளம் வயதிலேயே அறிவியல் ஆய்வு திட்டம் 485 மாணவர்களுக்கு "இன்ஸ்பயர்' விருது

இளம் வயதிலேயே அறிவியல் ஆய்வு திட்டம் 485 மாணவர்களுக்கு "இன்ஸ்பயர்' விருது


ADDED : ஜூலை 24, 2011 01:42 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : இளம் வயதிலேயே அறிவியல் ஆய்வு திட்டத்தின் கீழ் 485 மாணவர்களுககு 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்பட்டது.அகில இந்திய அளவில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த போதிலும் அறிவியலில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனை தவிர்க்க உருவாக்கப்பட்டதே புத்தாக்க அறிவியல் ஆய்வு திட்டமாகும். மாணவர்களை இளம் வயதிலேயே அறிவியலில் ஈர்க்கும் திட்டமே 'இன்ஸ்பயர்' திட்டமாகும்.6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் இளம் மாணவர்களின் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு மாணவருக்கும் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதும், 5 ஆயிரம் பரிசுத் தொகையும் சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் மூலம் வழங்கப்படுகிறது.



கடந்த ஆண்டில் மாவட்டத்தில் 500 மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் செக் வழ்ஙகப்பட்டது. மாணவர்களின் அறிவியல் படைப்புகள் பாளை இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.இதில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், களக்காடு பாண்டிமண் குறிச்சி இந்து நடுநிலைப் பள்ளி, ஆழ்வார்குறிச்சி ஜெயபாரதி உயர்நிலைப் பள்ளி 2ம் இடமும், இருக்கன்துறை திருக்குற்றாலம் நினைவு நடுநிலைப் பள்ளி, வடக்கன்குளம் தூய பெமின் நடுநிலைப் பள்ளி, குருவிகுளம் பஞ்., நடுநிலைப் பள்ளி 3ம் இடமும் பெற்றன.இந்த ஆண்டு மாவட்டத்தில் 485 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருக்கும் பள்ளியில் அறிவியல் படைப்புகளை உருவாக்குவதற்காக தலா 5 ஆயிரம் ரூபாய் செக் வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற மாணவ, மாணவிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைக்கின்றனர்.



இந்த 485 மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா பாளை மேரி சார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் நடராஜன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.இதில் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சசிகலா, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய துணை இயக்குனர் வள்ளி, கல்வி மாவட்ட அலுவலர்கள் பத்மாவதி, கிரேஸ் அன்னஹெலீனா, ஜெயக்கண்ணு, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ராஜபாலன் உட்பட பலர் பேசினர்.










      Dinamalar
      Follow us