sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தென்காசி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ்ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரதம்

/

தென்காசி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ்ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரதம்

தென்காசி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ்ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரதம்

தென்காசி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ்ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரதம்


ADDED : ஆக 11, 2011 02:19 AM

Google News

ADDED : ஆக 11, 2011 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி : தென்காசி ரயில்வே மேம்பாலம் - சர்வீஸ் ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரம் இருக்கப்போவதாக தென்காசி வர்த்தக சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



தென்காசி வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் பாம்பே ஸ்டோர்ஸ் அதிபர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆக.15 சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவது என்றும், மேம்பாலம் வேலை துரிதமாக நடந்துவந்தது. தற்போது வேலை நடைபெறவில்லை இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசு வேலையை முடிக்க முன்வரவேண்டும்.



மேம்பால வேலை நடைபெற கால தாமதம் ஆகின்ற காரணத்தால் மக்கள் வசதிக்காக சர்வீஸ் ரோட்டை விரைந்து சரிசெய்து மக்கள் பயன்பெறும் வகையில் சர்வீஸ் ரோட்டை முடித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டை - திருநெல்வேலி அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடித்து அத்தடத்தில் ரயில் இயக்க வேண்டும் என்றும் செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை வேலையை துவங்க வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்ளப்படுகிறது.



மக்கள் பெரிதும் பாதிக்கும் மேம்பால வேலையை சர்வீஸ் ரோடும் சரிசெய்யாமல் வேலையை கிடப்பில் போட்டுள்ளது. சர்வீஸ் ரோடு வேலை செயல்படவில்லை என்றால் தென்காசி வர்த்தக சங்கமும், தென்காசி பகுதியில் உள்ள அனைத்து வணிக சங்கங்களை அணுகி வர்த்தக பெருமக்களை ஒன்று திரட்டி மாபெறும் உண்ணாவிரதம் இருப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.



குற்றாலம் ரோட்டில், யானைபாலம் இரண்டு பக்கமும் தடுப்பு கம்பி இரண்டு அடி உயரம் தான் உள்ளது. நடந்து செல்லும் மக்கள் அந்த பக்கமும் நடப்பதற்கு பயப்படுகிறார்கள். ஆகையால் தடுப்பு கம்பி மேலும் மூன்று அடி உயரமாக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினரைக் கேட்டுக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. முடிவில் சங்க செயலாளர் கவிதா மாரியப்பன் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us