sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பண்பொழி பகுதியில் 2 வாட்டர் டேங்க் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்

/

பண்பொழி பகுதியில் 2 வாட்டர் டேங்க் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்

பண்பொழி பகுதியில் 2 வாட்டர் டேங்க் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்

பண்பொழி பகுதியில் 2 வாட்டர் டேங்க் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்


ADDED : ஆக 30, 2011 12:03 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கோட்டை : பண்பொழி டவுன் பஞ்., பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாட்டர் டேங்குகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் உறுதியளித்துள்ளார்.

கடையநல்லூர் தொகுதி பண்பொழி டவுன் பஞ்., பகுதிகளில் பண்பொழி, கந்தசாமிபுரம், திருமலைக்கோவில் அடிவாரம், கரிசல்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. 15 வார்டுகளை கொண்ட இந்த டவுன் பஞ்.,சில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக கூடுதலாக இரண்டு வாட்டர் டேங்குகள் அமைத்திட வேண்டுமென வலியுறுத்தினர்.



இது தொடர்பாக பண்பொழி அதிமுக செயலாளர் பரமசிவன் பண்பொழியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்கும், கரிசல்குடியிருப்பில் 1 லட்சம் லிட்டர் வாட்டர் டேங்கும் அமைத்து தரவும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு நிதி திட்டத்தில் இதற்கான பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் மனு அளித்தார். இதனை தொடர்ந்து பண்பொழி டவுன் பஞ்., மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் பண்பொழி, கரிசல்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இரண்டு வாட்டர் டேங்குகள் அமைத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், இதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செந்தூர்பாண்டியன் உறுதியளித்துள்ளார்.










      Dinamalar
      Follow us