sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இசை நிகழ்ச்சி

/

நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இசை நிகழ்ச்சி

நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இசை நிகழ்ச்சி

நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இசை நிகழ்ச்சி


ADDED : செப் 11, 2011 12:43 AM

Google News

ADDED : செப் 11, 2011 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரத்தை முன்னிட்டு நாதஸ்வரம், பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், உபன்யாசம் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து சங்கீத சபா செயலாளர் நடேசன், இணைச் செயலாளர் தளவாய் ராமசாமி நிருபர்களிடம் கூறுகையில், 'நெல்லை ஜங்ஷன் சங்கீத சபா 1946ம் ஆண்டு மேடைத்தளவாய் ராமசாமி முதலியாரால் ஒரு ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது. இயல் இசை நாடக மன்றம், சங்கீத நாடக அகடாமி மற்றும் உபயதாரர்கள் உதவியால் சபா வளர்ச்சி பெற்றது. கலையரங்கம் அமைக்க டாக்டர் கண்ணன் ஆதித்தன் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கியதால் கலையரங்கம் அமைக்கப்பட்டது. இந்திய இசை, நாட்டியம், உபன்யாசம் மேம்படுத்த சங்கீத சபா செயல்பட்டு வருகிறது. இங்கு வாய்ப்பாட்டு, மிருதங்கம் போன்ற இசை பயிற்றுவிக்கப்படுகிறது. சபாவிற்கு 16 நன்கொடையாளர்களும், 600 உறுப்பினர்களும் உள்ளனர். சங்கீத ரசிகர்களின் வசதிக்காக என்.ஜி.ஓ.பி.காலனியிலும் சபா கிளை துவக்கப்பட்டுள்ளது.



சபாவில் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நன்கொடையாளர்கள் வாரம் கொண்டாடப்படவுள்ளது. சபாவின் வளர்ச்சிக்கு உறுதுணையான நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு மாம்பலம் எம்.கே.எஸ்.சிவா குழுவினரின் நாதஸ்வரம் இன்னிசையும், 15ம் தேதி திருவனந்தபுரம் மிதிலாலயா நடன அகாடமி மைதிலி குழுவினரின் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி நடனங்கள் நடக்கிறது. 16ம் தேதி மதுரை மணிஐயரின் மருமகன் சென்னை பத்மபூஷன் டி.வி.சங்கரநாராயணன் இசை நிகழ்ச்சியும், 17ம் தேதி தியாகராஜ சுவாமிகளின் சரித்திரம் குறித்து விசாகா ஹரியின் சங்கீத உபன்யாசமும், 18ம் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த கர்நாடக இசை, மெல்லிசையில் பிரபலமான அஸ்வதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. 14ம் தேதி துவக்க நாள் நிகழ்ச்சியில் இந்திரா கிருஷ்ணமூர்த்தி இறைவணக்கம் பாடுகிறார். லோகா சுப்பிரமணியன் திருவிளக்கு ஏற்றுகிறார். சங்கீத சபா தலைவர் வி.எஸ்.வேலாயுதம் வரவேற்கிறார். 65 ஆண்டுகளில் சங்கீத சபா குறித்து சபா செயலாளர் நடேசன் விளக்குகிறார். நன்கொடையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சபா இணைச் செயலாளர் தளவாய் ராமசாமி நன்றி கூறுகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us