sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சீவநல்லூரில் ரூ.10 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் பணி துவக்கம்

/

சீவநல்லூரில் ரூ.10 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் பணி துவக்கம்

சீவநல்லூரில் ரூ.10 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் பணி துவக்கம்

சீவநல்லூரில் ரூ.10 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் பணி துவக்கம்


ADDED : செப் 19, 2011 12:01 AM

Google News

ADDED : செப் 19, 2011 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி : சீவநல்லூரில் 10 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

சீவநல்லூரில் அருந்ததியர் சமுதாயத்தினர் தங்களுக்கு சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அரசும் ஏற்றுக் கொண்டு சமுதாய நலக்கூடம் கட்ட 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சீவநல்லூர் பஞ்.,தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். செங்கோட்டை யூனியன் கமிஷனர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலன் முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் சட்டநாதன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டசபை தொகுதி இளைஞர் காங்.,செயலாளர் கதிரவன், இலத்தூர் மணி, பஞ்., எழுத்தர் இசக்கி, மக்கள் நலப்பணியாளர் கருணாநிதி, சமுதாய நாட்டாண்மை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியின் போது யூனியன் சேர்மன் சட்டநாதன் கூறும் போது, ''செங்கோட்டை யூனியனில் கடந்த 5 ஆண்டு காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது சீவநல்லூர் திருவெற்றியூர் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் அம்மன் கோவில் தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 6 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயும், சீவநல்லூர் குறவர் சமுதாயத்தினர் பயன்படுத்தும் மயானத்திற்கு பாதை வசதி மற்றும் எரிமேடை அமைக்க 3 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயும், சீவநல்லூர் தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயும், தரை மட்ட பாலம் அமைக்க 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இலத்தூர் 1வது தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயும், புளியரை மான்முட்டி காலனிக்கு செல்லும் செட்டியார் தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், கற்குடி இந்திரா காலனி 1வது தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 1 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும், மேல ரவியபத்து குளம் மடை சீரமைக்க 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



தெற்குமேடு குரங்குநடை சாலை தாமரை குளத்து கரையில் மறுகால் பக்கம் தடுப்பு சுவர் கட்ட 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயும், வாட்டர் டேங்க் 6வது தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயும், கிளாங்காடு புதுகிராமத்தில் சிமென்ட் தளம் அமைக்க 4 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், பாலமார்த்தாண்டபுரத்தில் மாணவர் விடுதிக்கு பின்புறம் வாறுகால் அமைத்து சிமென்ட் தளம் அமைக்க 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான டெண்டர் விடப்பட்டு இதற்கான தீர்மானங்களும் யூனியன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்றார் யூனியன் சேர்மன் சட்டநாதன்.










      Dinamalar
      Follow us