sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நாயகர் சதூர்த்திக்கு டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை கோரி மனு

/

நாயகர் சதூர்த்திக்கு டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை கோரி மனு

நாயகர் சதூர்த்திக்கு டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை கோரி மனு

நாயகர் சதூர்த்திக்கு டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை கோரி மனு


ADDED : ஆக 22, 2011 02:27 AM

Google News

ADDED : ஆக 22, 2011 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுரண்டை:விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வரும் 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென பா.ஜ., சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆலங்குளம் ஒன்றிய பா.ஜ., பொது செயலாளர் சோலைச்சேரி டாக்டர் அன்புராஜ் தமிழக அரசு மற்றும் சென்னை டாஸ்மாக் மேலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-'வரும் 1ம் தேதி விநாயகர் சதூர்த்தி விழா அனைவராலும் கொண்டாடப்படும் பெரிய விழாவாகும்.

மேலும் அன்று அரசு விடுமுறை தினமாகவும் உள்ளது. அன்று அனைத்து சமுதாயத்தினரும் விநாயகர் வழிபாடு நடத்தி வருகின்றனர். எனவே அன்று ஒருநாள் மட்டும் தேசத்தையும், தெய்வீகத்தையும் காப்பாற்றும் விதமாக தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us