sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வட்டார தடகள போட்டிசுப்புலாபுரம் மாணவர் சாம்பியன்

/

வட்டார தடகள போட்டிசுப்புலாபுரம் மாணவர் சாம்பியன்

வட்டார தடகள போட்டிசுப்புலாபுரம் மாணவர் சாம்பியன்

வட்டார தடகள போட்டிசுப்புலாபுரம் மாணவர் சாம்பியன்


ADDED : ஆக 26, 2011 01:33 AM

Google News

ADDED : ஆக 26, 2011 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேங்கடம்:வட்டார அளவிலான தடகள போட்டிகளில் சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கிடையே சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகள போட்டிகள் கரிவலம்வந்தநல்லூர் மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில் 16 பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மாணவர் மகேஸ்வரன் 100மீ, 600மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், குண்டு எறியும் போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளார்.17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முத்துகிருஷ்ணன் 100மீ, 800மீ ஓட்டம், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் குழு விளையாட்டு கோகோ போட்டியில் 14, 17 வயதிற்குட்பட்டோர் ஆகிய இருபிரிவுகளிலும் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரையும் தலைமை ஆசிரியர் பெருமாள்சாமி, ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us