sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிக்க வேண்டும் போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் வலியுறுத்தல்

/

டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிக்க வேண்டும் போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் வலியுறுத்தல்

டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிக்க வேண்டும் போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் வலியுறுத்தல்

டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிக்க வேண்டும் போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் வலியுறுத்தல்


ADDED : செப் 28, 2011 12:43 AM

Google News

ADDED : செப் 28, 2011 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : போக்குவரத்துக்கழகங்கள் பயன்படுத்தும் டீசலுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்க நெல்லையில் மா.கம்யூ., போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லையில் மா.கம்யூ., போக்குவரத்து இடைக்கமிட்டி ஆறாவது மாநாடு முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மகாராஜன் கொடியேற்றினார். வன்னியபெருமாள் வரவேற்றார். வெங்கடாசலம் தீர்மானம் வாசித்தார். சிஐடியு., மாவட்டச்செயலாளர் மோகன் துவக்கி வைத்தார். மா.கம்யூ., மாநகர செயலாளர் கருணாநிதி, காமராஜ், ஹரிக்குமார், இடைக்கமிட்டி செயலாளர் மனோகரன் உட்பட பலர் பேசினர். மா.கம்யூ., மாவட்டச்செயலாளர் பழனி மாநாட்டை முடித்து வைத்தார்.



9 பேர் கொண்ட புதிய இடைக்கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. இடைக்கமிட்டி செயலாளராக மனோகரன் தேர்வு செய்யப்பட்டார். பெட்ரோல், டீசல் விலைஉயர்வை மத்திய அரசு வாபஸ் பெறுவது, அனைத்து தரப்பு மக்களுக்கும் பொது விநியோக திட்டத்தை விரிவுபடுத்துவது, புதிய பென்ஷன் சீர்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடுவது, போக்குவரத்துக்கழகங்கள் பயன்படுத்தும் டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிப்பது, தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கத்தை முறைப்படுத்துவது, ரோடு விபத்துக்கு அரசுபஸ் டிரைவரை பொறுப்பாக்கி தண்டிப்பதை நிறுத்துவது, தொழில்நுட்பப்பணியாளர்கள், அலுவலக பணியாளர்களை உடனே நியமிப்பது, 240 நாட்கள் பணி முடித்தவர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








      Dinamalar
      Follow us