sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வி.கே.புரத்தில் தேமுதிக., செயல்வீரர்கள் கூட்டம்

/

வி.கே.புரத்தில் தேமுதிக., செயல்வீரர்கள் கூட்டம்

வி.கே.புரத்தில் தேமுதிக., செயல்வீரர்கள் கூட்டம்

வி.கே.புரத்தில் தேமுதிக., செயல்வீரர்கள் கூட்டம்


ADDED : ஆக 05, 2011 02:57 AM

Google News

ADDED : ஆக 05, 2011 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரத்தில் நகர தேமுதிகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் தலைமை வகித்தார்.

வக்கீல் வள்ளுவராஜ், பிரான்சிஸ், லாலா மாரியப்பன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பீட்டர் சுவாமிநாதன் வரவேற்றார்.கூட்டத்தில், விக்கிரமசிங்கபுரத்தில் சுமார் 60 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மக்கள் தொகை இருந்தும் அரசு பொது மருத்துவமனை இல்லை என்பதை கண்டிப்பதோடு இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக மாற்ற வேண்டும். காரையார் - திருவனந்தபுரம் மலைவழிச்சாலை அமைக்க வேண்டும். வீடுகளில் சொந்த பயன்பாட்டிற்கு புட்வால்வு பொருத்தி மோட்டார் மூலம் நீர் ஏற்றியதில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மோட்டார்களை பறிமுதல் செய்த அதிகாரிகளை கண்டிப்பதுடன், மோட்டார்களை சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது.



விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் சம்பந்தமாக தோண்டப்படும் குழியினை நகராட்சி ஊழியர்கள் சரியாக மூட வேண்டும். விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ஒவ்வொன்றும் சுமார் 25 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 10 குப்பை அகற்றும் வண்டி இதுவரை செயல்பாட்டிற்கு வராததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் நவ கைலாயத்தில் முதன்மை ஸ்தலமாக விளங்கும் பாபநாசம் கோயிலின் படித்துரையை சுத்தமாக வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 7 மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இதுவரை நீர் ஏற்றாமலும், குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை சரியான முறையில் பயன்படுத்தாத நகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பதுடன் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டது.நகரில் 8வது வார்டு மேலக்கொட்டாரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீரில் குப்பை சேர்வதால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளதை நகராட்சி நிர்வாகம் கவனிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும்



அகஸ்தியர் அருவியை சுற்றுலா ஸ்தலமாக்கி சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் பேசும்போது, ''விஜயகாந்த் பிறந்த நாளை ஆடம்பரம் இல்லாமல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கி கட்சியினர் கொண்டாட வேண்டும்'' என்றார்.கூட்டத்தில் அம்பை நகர செயலாளர் முத்துப்பாண்டி, ஆழ்வார்குறிச்சி சண்முகம்சேட், மாவட்ட மாணவரணி செயலாளர் ஐயப்பன், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, மாரியப்பன், சரவணன், ரவிச்சந்திரன் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

நகர அவைத்தலைவர் இசக்கிராஜன் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us