sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்

/

உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்


ADDED : ஜூன் 06, 2025 02:58 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் இருந்த பழமையான அரச மரம் மற்றும் கருங்காலி மரம் உட்பட நான்கு மரங்கள் உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று வெட்டி அகற்றப்பட்டன.

திருநெல்வேலி முருகன் குறிச்சி பகுதியில் செயல்படும் அரசு சித்த மருத்துவ கல்லுாரி வளாகத்தில் அரச மரங்கள், கருங்காலி மரங்களை பொதுப்பணித்துறையினர் வெட்டி அகற்றினர். இது குறித்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து புகார் தெரிவித்தனர்.

நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தன்றும்கூட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது குறிப்பிடதக்கது.

சித்த மருத்துவ பாடங்களில் அரச மரம் மற்றும் கருங்காலி மரங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் அவை பயன்பட்டு வந்தன.

'கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லுாரியின் புற நோயாளிகள் பிரிவு கட்டடம் சேதமடைந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கும், மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி கட்டுவதற்கும் தமிழக பட்ஜெட்டில் ரூ .40 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த பணிகள் நடப்பதற்காக தற்போது மரங்கள அகற்றப்பட்டுள்ளன 'என முதல்வர் கோமளவள்ளி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us