/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெண் கூட்டு பலாத்காரம் நெல்லையில் இருவர் கைது
/
பெண் கூட்டு பலாத்காரம் நெல்லையில் இருவர் கைது
ADDED : ஜன 26, 2025 08:16 AM
திருநெல்வேலி : புதுச்சேரி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியர், அரசு போக்குவரத்து கழக டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியை சேர்ந்த 29 வயது பெண், திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார். திருநெல்வேலியில் கிறிஸ்துவ பிரசங்க கூட்டத்திற்கு அடிக்கடி சென்று வந்தார்.
திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே கார்ட் ஆக பணிபுரியும் சுபாஷ், 37, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் சுபாஷ், மானுார் அருகே வெங்கல பொட்டலில் உள்ள தன் வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றார். வீட்டில் அவரது மனைவி, மகன், மகள் இல்லை.
சுபாஷ் தன் நண்பர் மானுார் ரஸ்தாவை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர் முருகேசன், 37, என்பவரை வீட்டுக்கு அழைத்தார். மூவரும் மது அருந்தினர். அப்போது சுபாஷ், முருகேசன் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.
மயக்கம் தெளிந்த பெண் தான் பாதிக்கப்பட்டதை அறிந்து திருநெல்வேலி மாவட்ட அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கூட்டு பலாத்காரம் வழக்கு பதிவு செய்து, சுபாஷ், முருகேசனை கைது செய்தனர்.