/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அனுமதி பெறாத வணிக கட்டடங்களுக்கு சீல்
/
அனுமதி பெறாத வணிக கட்டடங்களுக்கு சீல்
ADDED : நவ 28, 2024 02:55 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக கட்டடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 76 வீடுகள், 26 வணிக கட்டடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன.
உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் 68 விதிமீறல் கட்டடங்களை கண்டறிந்துள்ளனர். இந்த கட்டடங்களுக்கு மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் முறைப்படி நோட்டீஸ் வழங்கினர். ஆனால் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. எனவே அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்குப்படி சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்தார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
திருநெல்வேலி பேட்டையில் ஒரு ரைஸ் மில், பாறையடியில் இரும்பு மொத்த கடை, டவுனில் மாடி ஜவுளிக்கடை ஆகியவற்றுக்கு மாநகராட்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், கெபின் ஜாய், உதவி பொறியாளர் தன்ராஜ் ஆகியோர் சீல் வைத்தனர்.
மதுரை ஐகோர்ட் உத்தரவு
திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் அருகில் அனுமதி இல்லாத ஜவுளி கடைக்கு சீல் வைக்க சென்ற போது, அதன் உரிமையாளர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் மதியத்திற்குள் தடை உத்தரவு வந்துவிடும் எனவும் தெரிவித்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று மதியம் நடந்த விசாரணையில் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுமதியளித்தது. இதையடுத்து ஜவுளி கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சீல் வைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு ஐக்கியமாகி இருந்தனர். எனவே நேற்று விடுமுறையில் சென்றும், வேறு பணிக்கு சென்றும் ஒதுங்கி கொண்டனர்.
வேறு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா கூறியது: அனுமதி இல்லாத கட்டடங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலுக்குத் துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.