/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அடுக்குமாடி ஜவுளி கட்டடத்தை இடித்து அகற்ற நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவு
/
அடுக்குமாடி ஜவுளி கட்டடத்தை இடித்து அகற்ற நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவு
அடுக்குமாடி ஜவுளி கட்டடத்தை இடித்து அகற்ற நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவு
அடுக்குமாடி ஜவுளி கட்டடத்தை இடித்து அகற்ற நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவு
ADDED : நவ 09, 2025 03:04 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாநகராட்சி அனுமதியை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி ஜவுளி கட்டடத்தை இடித்து அகற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவிட்டது.
இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமலும், பெற்ற அனுமதிக்கு மாறாகவும் 200க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
16 பிரபல தனியார் மருத்துவமனைகள் உட்பட 200 வணிக வளாக கட்டடங்களிலும் போதிய செட் பேக் இடமில்லை. போதிய வாகனங்கள் நிறுத்தம் இல்லை. அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்ல போதிய பாதைகள் இல்லை என்ற சர்ச்சை நிலவுகிறது. இதுபோன்ற நிலையில் அனுமதி மீறிய கட்டடங்களுக்கு மாநகராட்சியினர் முறைப்படி மூன்று நோட்டீஸ்கள் வழங்க வேண்டும்.
மூன்று நோட்டீஸ்களுக்கு பிறகு அதை இடித்து அகற்ற வேண்டும் என்பது அரசு உத்தரவாகும். ஆனால் பெரும்பாலான வணிக கட்டட உரிமையாளர்கள் மாநகராட்சி உயர் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு விதி மீறலை தொடர்கின்றனர்.
திருநெல்வேலி வண்ணார் பேட்டை ரவுண்டானா பகுதியில் திருச்செந்தூரைச் சேர்ந்த நித்யாவுக்கு சொந்தமான இரண்டு மாடி கட்டடத்தில் ஜவுளிக்கடை செயல்பட்டு வந்தது. தரைத்தளம் மற்றும் முதல் மாடிக்கு மட்டும் பெறப்பட்ட அனுமதியை மறைத்து இரண்டு மாடிகள் கட்டப் பட்டுள்ளன. செட் பேக் நிலம் இல்லை. போதிய வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை. எனவே விதி மீறலில் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதுகுறித்து சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் முறையீடு செய்தார். புகாரை விசாரித்த துறை கூடுதல் செயலர் காஞ்சனா மாலா கட்டடத்தை மூன்று மாதங்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும். இதற்காக மாநகராட்சியிலும் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி கட்டடத்தை இடிக்க சுற்றிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இடிக்கும்பணி துவங்கியுள்ளது.

