sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சப் கலெக்டராக நடித்து 10 பவுன் நகை மோசடி: பெண் கைது

/

சப் கலெக்டராக நடித்து 10 பவுன் நகை மோசடி: பெண் கைது

சப் கலெக்டராக நடித்து 10 பவுன் நகை மோசடி: பெண் கைது

சப் கலெக்டராக நடித்து 10 பவுன் நகை மோசடி: பெண் கைது


ADDED : அக் 19, 2025 03:27 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சப் கலெக்டர் போல நடித்து உறவினரிடம் 10 பவுன் நகை வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் காரியாகுளத்தை சேர்ந்தவர் மகிழ்வதனா. இவரது துாரத்து உறவினர் நக்கனேரியைச் சேர்ந்த சத்யாதேவி 34.

இவர் தான் சப் கலெக்டராக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். “ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை பெற வேண்டும். அதற்கு 100 பவுன் நகை அவசியம். தற்போது தன்னிடம் 90 பவுன் நகை உள்ளது. மீதம் தேவையுள்ள 10 பவுன் நகையை கொடுத்தால், ஒப்பந்தம் கிடைத்ததும் அதிக லாபம் தருவேன்,” எனக்கூறி, மகிழ்வதனாவின் கணவரிடமிருந்து 10 பவுன் நகை பெற்றுள்ளார்.

அதன்பின் நகையை திருப்பித் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோதும், சத்யாதேவி முறையாக பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து மகிழ்வதனா, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். சத்யாதேவியை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us