/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சப் - கலெக்டர் என நகை மோசடி செய்த பெண் கைது
/
சப் - கலெக்டர் என நகை மோசடி செய்த பெண் கைது
ADDED : அக் 19, 2025 02:24 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட் டம், காரியாகுளத்தை சேர்ந்தவர் மகிழ்வதனா. இவரது உறவினர் நக்கனேரியை சேர்ந்த சத்யாதேவி, 34. இவர், தான், சப் - கலெக்டராக இருப் பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
'ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை பெற வேண்டும். அதற்கு, 100 சவரன் நகை அவசியம். தற்போது தன்னிடம், 90 சவரன் நகை உள்ளது.
'மீதம் தேவையுள்ள, 10 சவரன் நகையை கொடுத்தால், ஒப்பந்தம் கிடைத்ததும் அதிக லாபம் தருவேன்' எனக் கூறி, மகிழ்வதனாவின் கண வரிடமிருந்து, 10 சவரன் நகை பெற்றுள்ளார்.
அதன் பின் நகையை திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோதும், சத்யாதேவி முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மகிழ்வ தனா, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். சத்யாதேவியை போலீசார் கைது செய் தனர்.